Thursday 12 July 2012

 " ஆடி " - கழிவு மாதமா?

என் அன்புமகள் கமலாதேவிக்கு,

அன்று என்னிடம் நீ கேட்ட கேள்விகளுக்கு அப்பொழுதே பதில் கூறிவிட்டாலும்,(ஏன் இந்த மாதத்தில் எங்குபார்த்தாலும் திருமணக்காட்சிகளாகவே உள்ளன?) அக்கேள்விகளுக்கான விடைகள் இன்னும் முற்றுப்பெறாததைப் போலவே உணர்கிறேன். உன்னுடன் மீண்டும் அதுகுறித்து விரிவான விவாதமாகவும், தகவல் பரிமாற்றமாகவும் இக்கடிதத்தை எழுதுகிறேன். நீயும், கடிதம் கிடைக்கப்பெற்று உன் நண்பர்களுடன் கருத்துக்களப் பகிர்ந்து கொள்வாய் என நம்புகிறேன். சரி. விசயத்திற்கு வருகிறேன்.

வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத எந்த சமூகமும், பழமையின் எச்சங்களை இறுக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதோடு, வளர்ச்சியிலிருந்து தன்னைத்தானே தடுத்துக் கொள்ளவும் செய்கிறது. அதே சமயம் நமக்கு முன்பிருந்தது என்ன? என்று கூட தெரியாதபடி, திடீர் மாற்றத்திற்கான காரணத்தையும், அவசியத்தையும் மறைத்து விடுவதோடு சமூகத்தில் இது புதுக்குழப்பத்தையும், பொருந்தாத் தன்மையையும் உருவாக்கிவிடுகிறது. தேவையை மையப்படுத்தாத இம்மாற்றத்தினை நாம் வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ள இயலாது.

உடல் திசுக்களில் அதன் பெருக்கம் உடல் வளர்ச்சிக்கு அவசியமானது என்றாலும், திடீரென்று பல்கிப் பெருகும் திசு வளர்ச்சி உடல் கூறுக்கு தேவையற்றதாகவும், பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தை விளவிக்கக் கூடிய பெரும் கேடாகவும் மாறுவதைப் போல, சமூக மாற்றமானதும் மக்களின் தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்றதாய் இருக்க வேண்டும்.  அத்தகைய மாற்றத்தையே நாம் அச்சமூகத்திற்கான வளர்ச்சி நிலையாக எடுத்துக் கொள்ள இயலும். திடீரென நாகரீகத்தின் பெயராலோ, மூட நம்பிக்கைகளின் பெயராலோ ஏற்படுகின்ற பண்பாட்டு மாற்றங்கள், எந்த ஒரு சமூகத்திற்கும் நல்ல சீரான வளர்ச்சியைத் தந்து விடுமென்று கூறமுடியாது.

மக்கள் எப்பொழுதும் தன்னைச் சுற்றி ஏற்படும் மாற்றங்களப் பற்றிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அத்தகைய மக்களக் கொண்ட சமூகமே நல்லவைகள ஏற்று அல்லவைகளத் தள்ளும் தகுதியுடையதாயிருக்கும்.

ஆடி மாதத்தைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது இத்தகைய போக்கை நான் உணர்ந்தேன். ஏன், எதற்கு, எப்படி என்று அறிந்து கொள்ள முயற்சிக்காமல், வெறும்  வெளிப்புற ஆரவாரத்தை உள்வாங்கி மகிழ்ச்சியுறும் மக்களாலேயே இந்தத் தேவையற்ற சம்பிரதாயங்களும், சடங்குகளும் புற்றுநோயைப் போல வளர்ந்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இன்றைய ஆடிமாதக் கழிவுக் கொண்டாட்டம்! ஆடித்தள்ளுபடி! மற்றும் அட்சய திருதியைகள் எல்லாம்...

சரி, இவை எந்த அளவிற்;கு மக்களின் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, ஆடி மாதம் சிறப்பான மாதமா? அல்லது நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்று தள்ளி வைக்கப்பட்ட மாதமா? இந்தக் கேள்வியில் இருக்கும் முரண்பாடுதான் இன்றைய நடைமுறையாகவும் இருந்து வருகிறது. ஒரு பக்கம் நல்ல காரியங்கள் செய்யக்கூடாதெனத் தடை செய்யும் போக்கு, மறுபுறம் பொருளாதார ரீதியான விற்பனைப் பெருக்கம், தள்ளுபடி விற்பனை.  இவ்வாறான முரண்பாடுகளுக்கிடையில் ஒரு மாதம் படும்பாடு...அதிசயமானதாய் இருக்கின்றது. அப்படியென்ன காரணம் கிடைத்தது மக்களுக்கு! ஆடி மாதத்தில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாதென்பதற்கு? மேலும், யார், எதற்கு, எப்போது முதல் இந்த ஆடிமாதத்தை நற்காரியங்கள் செய்யக்கூடாத மாதம் எனப் புறக்கணித்தார்கள்?

பொதுவாக ஆனி மாதத்திற்கு என்ன சிறப்பென்றால், அடுத்து ஆடி மாதம் துவங்கப்போகின்றது என்பது தான். ஆடி மாதம் துவங்கப் போகின்றது என்பதால் ஏறத்தாழ ஆனிக்குள் எவ்வளவு திருமணங்கள் முடிக்க முடியுமோ அவ்வளவு செய்து விடுகிறார்கள். ஆடி மாதத்தில் திருமணம் போன்ற எந்த நல்ல காரியங்களும் நடத்துவது என்பது பழக்கத்தில் கிடையாது. ஆடி மாதம், மாதங்களில் கெட்ட மாதம் என்ற திடீர் பழக்கம் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. ஆடி மாதத்தில், திருமணங்கள் பற்றி பேசுவது கூட கிடையாது. பேசினாலே அது தவறான காரியத்திற்கு ஆரம்பமாகி விடும் என்கிறார்கள். நல்ல காரியத்தை இம்மாத்தில் தொடங்கவே கூடாது. இது இன்றைய தமிழர் கலாச்சாரங்களில் ஒன்றாகவே வந்து விட்டது. சொந்த வீட்டிற்கொ அல்லது வாடகை வீட்டிற்கோ இந்த மாதத்தில் குடிபோகக் கூடாது!

“அப்படியென்றால் நீங்கள் மட்டும் ஏன் ஆடி மாதத்தில் நமது புது வீட்டிற்கு குடி வந்தீர்கள்” என்றாய்! உனக்குத் தெரியுமே, என் முடிவுகள் பற்றி! நல்லவைகளச் சிந்திக்கும் எல்லா நாட்களும், உழைக்கும் நாட்கள் எல்லா நாட்களும் நல்ல நாட்களே! உழைக்காமல் பணம் சேர்க்க நினைப்பவர்களுக்கு மட்டும்தான் நல்ல நேரம், நல்ல நாள், நல்ல மாதம் எல்லாமே! எனக்கு எல்லா மாதமும் உழைக்கும் மாதம்தான். எனவே தான் நான் இதையெல்லாம் நம்புவது கிடையாது. “மேலும் ஆடிமாதம் கெட்ட மாதம் என்ற சிந்தனையும், பழக்கமும் சமீபத்தில் ஏற்பட்டதா?” இப்போது தான் ஆடி மாதத்தை தவிர்க்கின்றார்களா என்றால், இல்லை! ஆடி மாதத்தை நல்ல காரியங்களுக்காக தவிர்த்தது என்பது இன்று நேற்றல்ல, அது காலம் காலமாக தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற ஒரு நிகழ்வு. அன்று தவிர்த்ததற்கான காரணம் அறிவுப் பூர்வமானது. தேவையின்பாற்பட்டது. ஆனால் இன்று தவிர்ப்பது தேவையில்லாதது. பகுத்தறிவிற்குப் புறம்பானது. வெறும் சடங்காகி ஒரு மூடப்பழக்கமாகி, உழைக்கும் மக்களின் சிந்தனையை மழுங்கடித்து விட்டது பார்ப்பனீயம்.

ஆடி மாதம் பற்றிய பல செய்திகளை நாம் தெரிந்தாக வேண்டும். ஏன் தெரியுமா “ஆடிக்கழிவு” என்று நகைக்கடை, துணிக்கடை, பாத்திரக்கடை என அனைத்தும் ஆடி மாதத்தை “கழிவு” மாதமாக்கி விட்டது. ஆடி மாதம் குறித்த அரிய செய்திகளை நாம் தெரிந்தாக வேண்டியது அவசியமாகிறது. முதல் செய்தி, ஆடி மாதம் என்பது பார்ப்பனீயம் சித்தரிப்பது போல மோசமான மாதம் அல்ல. ‘புனிதமானது என்றும் நாம் சொல்லவில்லை!’ மற்ற மாதங்களுக்கு என்ன மதிப்பு உள்ளதோ அது தான் இதற்கும், அவ்வளவேதான் நம் வாதம். ஆனால் இது மோசமானது என்று சித்தரிக்கப்பட்டு வருவது முற்றிலும் தவறானதாகும். சிந்தித்துப்பார்த்தால் இதன் காரணம் புரியும். தமிழகத்தைப் பொருத்தவரை (சித்திரை முதல் பங்குனி வரை தமிழ்நாட்டில் உள்ள மாதங்கள். வேறு மாநிலங்களில் இந்த மாதங்கள் வழக்கத்தில் இல்லை) ஆடி மாதத்தில் இயன்ற வரை நல்ல காரியங்கள் செய்வதும் இல்லை, தொடங்குவதும் இல்லை. இதைப் பற்றித் தான் நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமானது உணவு. அந்த உணவை உற்பத்தி செய்வதற்கு நம் மூதாதையர்கள் தெரிவு செய்த மாதம் ஆடி (‘ஆடி பட்டம் தேடி விதை’ என்ற முதுமொழி இன்னமும் உண்டு) காய்கறித் தோட்டம் போடுபவன் கூட ஆடியில்தான் விதைக்கிறான். மறு முளைப்புத் திறன் கொண்ட விதைகள் உடைய பயிர்கள் எல்லாம் ஆடியில்தான் இன்னமும் பயிர் செய்யப்படுகின்றது. அப்படி மனிதனின் உணவுத் தேவையை உற்பத்தி செய்யத்துவங்கும் மாதம் ஆடியாக உள்ள போது அது எப்படி கெட்டமாதமாக இருக்க முடியும்? அடுத்தது, மனிதன் மனிதனாக வாழ வேண்டுமென்றால் அறிவு பெற வேண்டும். ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்றார் தந்தை பெரியார். உணவு மனிதனுக்கு எப்படி வாழ்வாதாரமாக உள்ளதோ அதைவிட, அவசியமானது அறிவு. அந்த அறிவு என்பதைக் கல்வியின் மூலம் பெறுகிறோம். அந்த கல்வியை கற்க நாம் தொடங்குவது ஆடி மாதத்தில் தான். ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு. விவசாயம் தொடங்குவதற்கு ஏதுவாக காவிரி ஆற்றில் புதுப்புனல் பெருக்கெடுத்து வரும். புதுப்புனல் பெருக்கெடுத்து வருவது போல் அந்த நாளில் படிக்கத் தொடங்கினால் கல்வியும் பெருக்கெடுத்து வரும் என்று நம் முன்னோர்கள் நம்பினார்கள். எனவே அந்த் தினத்தில் குழந்தைகளை இன்றும் கல்விக் கூடங்களில் சேர்க்கின்றார்கள். ஆடி 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால் தொடக்கப் பள்ளிக்கூடங்களில் இன்றும் கூட மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றது. ஞாயிற்றுக்கிழமை கூட வேலை நாளாகக் கருதப்படுகிறது. இது காலம்காலமாக நடந்து  வருகின்ற நிகழ்ச்சி. என்னை புதுக்கோட்டை காந்திநகர் பள்ளியில் என் தந்தை 1ம் வகுப்பில் சேர்த்து விட்டதே ஆடி 18ல் தான்.

தமிழ்நாடு, விவசாயத்தையே முழுமுதற் தொழிலாகவும், பொருளாதாரமாகவும் நம்பியிருக்கும் தேசம். அதற்கான புவியியல் அமைப்பும், விவசாயத்திற்கு சாதகமாகவே இருந்தது. அந்த விவசாயத்தை ஆடி மாதத்தில் துவங்கி விடுவதால் மக்கள் அனைவரும் முழுமையாக விவசாயத்திற்குள் தங்களப் பிணைத்துக் கொள்வார்கள். விவசாயத்தில் முழுமையாக ஈடுபடாத மேல்தட்டு வர்க்கம் கூடக் கீழ்நிலையில் உள்ள விவசாயிகளின் உடல் உழைப்பையே முழுமையாக நம்பி இருப்பதால், அவர்களும் ஆடி மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளயும் வைத்துக் கொள்வதில்லை. மேலும் அந்நாளய விவசாயம் என்பது, உழைப்பைப் பணமாகப் பெறாத காலம். அதாவது நமது வயலில் பத்து உழவு ஏர் தேவையென்றால், ஊரில் உள்ள இதர 10 வீட்டு ஏர்களும் நமக்கு வந்து உழுது கொடுப்பார்கள். கூலி கிடையாது, மாறாக அவர்கள் வீட்டு உழவுக்கு நமது வீட்டு ஏர் போகும். இப்படியேதான் அன்றைய விவசாயம் நடந்து வந்தது. நாற்று நட வீட்டுக்கு ஒருவர் அண்டை வீட்டாருக்குச் செல்வதும், அறுப்பதற்கும். அடிப்பதற்கும் இப்படி ஒவ்வொன்றுக்கும் விவசாயிகள் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் விவசாயம் செய்து வந்தனர். வாய்க்கால் வெட்டுவதாக இருந்தால் வீட்டுக்கு ஒருவர் மண்வெட்டியுடன் செல்ல வேண்டும். ‘கூலி முறை’ விவசாயம் வருவதற்கு முன்னால் இருந்த வந்த விவசாய முறை இது.
இப்படி இருந்த விவசாயிகள் காலப்போக்கில் ஆரியர்களின் வருகையினால், உழைக்கும் மக்களின் விவசாய நிலங்கள் அனைத்தையும் அதிகாரத்தினாலும்,  சூழ்ச்சிகளினாலும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கினர். இந்த மக்கள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டனர். காடுகளயும், புதர்களயும் அழித்து விவசாய நிலமாக மாற்றி, உழுது பயிர் செய்து, ‘உறவு முறை’ விவசாயம் செய்து வாழ்ந்து வந்த மக்கள், நயவஞ்சகப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினால், தங்கள் உயிரினும் மேலாகப் பாதுகாத்து வந்த நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தனர். இறுதியில் நிலமற்ற கூலி விவசாயிகளாக மாற்றப்பட்ட இம்மக்கள், தங்களின் நிலத்திலேயே, பார்ப்பன நில உடைமையாளர்களுக்கு தினக்கூலிகளாக மாற்றப்பட்டனர். ‘உறவுமுறை விவசாயிகள்’ ‘கூலி விவசாயிகளாக’  இவ்வாறுதான் மாற்றப்பட்டனர். உறவுமுறை விவசாயம் இருந்தவரை விவசாயப்பணிகள் என்பது இம்மக்களிடம் தனித்தனியாக இல்லை, ஒன்றாகவே இருந்தது. எனவேதான் இவர்களால் இந்த ஆடி மாத காலத்தில் விவசாயம் தவிர்த்த எந்த நிகழ்ச்சிகளையும் தவிர்த்து வந்தனர். விவசாயிகளின் விழாக்கள் என்பது அந்த நாளில் இரண்டு தான். ஒன்று குடும்ப வைபவங்கள் மற்றது கோவில் திருவிழாக்கள். இப்போதும் கூட கோவில் திருவிழாக்கள் ஆடி மாதத்தில் எந்த கிராமத்திலும் நடைமுறையில் இல்லை.

ஆடி மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகள் அந்நாளில் ஒத்தி வைத்ததற்கு இது தான் காரணம். மேலும் இதற்குள்ளேயே மற்றொரு செய்தியும் அடங்கியுள்ளது. அந்நாளய கோவில் திருவிழாக்களாக இருந்தாலும், குடும்ப வைபவங்களாக இருந்தாலும் எப்படி நடைபெறும் தெரியுமா? உனக்கு இதை நான் சற்று விவரமாக கூறினால் தான் ஆடி மாதத்தில் நற்காரியங்களத் தவிர்த்ததற்கான காரணம் புரியும். அந்நாளய திருமணம் என்பது இப்போது நகரங்களில் நடைபெறும் ஒப்பந்த முறை ( contract ) திருமணம் போல் கிடையாது. இப்பொழுதெல்லாம் நகரத்துத் திருமணங்கள் அனைத்திற்கும் ஒப்பந்தக்காரர்கள் இருக்கின்றார்கள். பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது என்பது மட்டும் தான் பெற்றோர்கள் வேலை. அது கூட தற்போது திருமணத் தரகர்கள், இன்டர்நெட் என வந்துவிட்டது.

சென்னையில் அன்று ஒரு நாள் நானும் உன் அண்ணனும் ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொண்டோம். மண்டபத்தின் உள்ளே சென்று அமர்ந்ததும், ஒரே மாதிரி சீருடை அணிந்த 10, 15 பெண்கள் செயற்கைச் சிரிப்புடன் தாம்பாளத்தில் குளிர்பானங்கள ஏந்தி வந்தனர். கூலிக்காக விருந்தினரை உபசரிக்கும் ஒரு இலக்கணம் இது. பந்தல் போடுவது, வாழை மரம், குருத்து கட்டுவது முதல் விருந்தினரை வரவேற்று சந்தனம், குங்குமம், குளிர்பானம் கொடுத்து, சோறு போட்டு, தாம்பூலம் கொடுத்து அனுப்புவது வரை கூலித் தரகர்கள் தான். பெண், மாப்பிள்ள வீட்டார்கள், சமீபகாலங்களில் திருமண அழைப்பிதழ் அனுப்பும் வேலையைக் கூட ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்கின்றனர். வி..பி, வி.வி.ஐ.பி, தவிர மற்றவர்களுக்கு அழைப்பிதழ் கூட தபால் மற்றும் கூலி முகவர்கள் மூலம் தான்  கொடுக்கிறார்கள். அப்படியெனில் திருமண வீட்டாரின் பங்கு திருமணத்தில் என்ன என்கின்றாயா? ஒரே ஒரு வேலைதான், அந்த செலவுகளுக்கெல்லாம் பணப் பட்டுவாடா செய்வது தான். இன்றைய திருமணங்களில் எதுவும் உணர்வுபூர்வமாகவோ, உள்ளபூர்வமானதாகவோ இல்லவே இல்லை. அனைத்திலும் ஒரு செயற்கைத்தனமும், போலித்தனமும் கூடிய ஆடம்பரம் மட்டும் தான் எஞ்சி நிற்கின்றது.

இந்தச் செய்தியில் நீ மேலும் புரிந்து கொள்ள வேண்டியதும் இதுதான். அதாவது அன்றைய விழாக்கள் அனைத்திலும் பல்வேறு இனக்குழுக்களாக மக்கள் பிரிந்து வாழ்ந்தாலும், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் உறவு முறையிலும், நட்பு முறையிலும் நெருக்கமான பிணைப்பு இருந்தது. அந்நாளில் திருமணம் என்பது பெண்பார்க்க துவங்குவது முதல், திருமணம் முடிந்து அவர்கள் குடும்பமாக மாறும் வரை உறவினர்கள் உடனிருப்பார்கள். பெண்பார்க்கச் செல்வதற்கு நெருங்கிய உறவினர், ஊர் நாட்டாமை சகிதம் செல்ல வேண்டும். பேசி முடிப்பதற்கும் அதே போல் செல்வார்கள். திருமணத் தேதி வைப்பது முதல் சமையலுக்கு நெல் அவிப்பது வரை கூடிப்பேசியே முடிவு செய்யப்பட்டது. வீட்டுக்கு ஒரு நபர், பெண் அல்லது ஆண் நெல் அவித்து காய வைத்து நெல்லை குத்தி அரிசியாக்கி புடைத்துச் சுத்தம் செய்து மூட்டையாக கட்டி வைத்து விட்டுச்செல்வார்கள். அந்நாளில் நெல் அரைக்கும் மில்கள் கிடையாது. அதனால் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டனர். அது முடிந்த பிறகு திருமணத்திற்கு விறகு (மரம்) வெட்டுவார்கள். பிறகு அதை உடைத்து விறகாக மாற்றுவார்கள். இதற்கு வீட்டிற்கு ஒரு ஆண் செல்ல வேண்டும். இப்படியாக பாக்கு வைப்பது முதல் (அச்சு இயந்திரம், பத்திரிக்கைகள் இல்லாத காலங்களில் திருமணத்திற்கு அழைக்கும் முறை இது) பந்தல் போடுவது, வாழைமரம், தோரணம் கட்டுவது, சமையல் செய்வது, உறவு முறைகள் திருமணத்திற்கு வரும்போது வரவேற்பது, வழியனுப்புவது வரை எல்லா வேலைகளும் உறவினர்களால் பகிர்ந்தே செய்யப்பட்டது.

புதுமணத் தம்பதிகள் ஒருவரை ஒருவர் பேச வைப்பதற்கு ஒரு குழுவே செயல்பட்டு வந்த காலம் அது. பெண் தோழி, மாப்பிள்ளத் தோழன் என்றொரு அமைப்பே செயல்படும். திருமணமாணவர்கள் ஒருவருக்கொருவர் தாங்களாகவே பேசிக்கொள்வதற்கு ஒரு வாரம், 10 நாட்கள் என்றெல்லாம் கூட ஆகிவிடுவது உண்டு. அது வரை இந்த உறவுக்காரர்கள் தான் அவர்களைப் பேச வைப்பார்கள்.  இப்போது பெண்பார்க்க வரும்போதே பையனும், பெண்ணும் தனிமையில் பேசி கருத்து பரிமாறிக்கொள்கின்றனர். இது பெண், இது மாப்பிள்ள என்று முடிவாகிவிட்டால் போதும் எல்லா செல்போன் கம்பெனிகளும் தற்போது யுனயஅ கார்டுகள் விற்பனை செய்கின்றன. வாடகையைக் கட்டி 24 மணி நேரமும் இலவசமாக பேசிக் கொள்ளலாம், இது இப்போது. அந்நாளில் எல்லாமே மனித உழைப்புத்தான் ( man power ) திருமணம் முடிந்த பிறகு தம்பதிகளுக்கிடையிலும், பெண் கொடுத்து எடுத்தவர்களுக்கிடையிலும் உறவும், நட்புச் சுழலும் இரண்டு பக்கங்களிலும் வளர, நெருங்கிய உறவுக்காரர்கள் அறிமுகம் பெறுவதற்காக, மணமக்களுக்கு முதல் வழி, இரண்டாம் வழி, மூன்றாம் வழி என்ற  பெயரில் இங்கிருக்கின்ற உறவினர்கள் அங்கு செல்வதும், அங்கிருக்கின்ற உறவினர்கள் வட்டம் இங்கு வருவதும், இப்படியாக மாறி மாறி போய் வருவதன் மூலமாக குடும்ப உறவுகள் நெருக்கமாக வளர்ந்தன.

திருமணம் என்ற நிகழ்ச்சிகள் வரும்போது ஒரு கிராமத்தில், ஊரில் உள்ள உறவினர்கள் அனைவருமே இணைந்து செயல்பட்டு வந்தனர். இப்படி அனைத்து உறவினர்களும் நண்பர்களும் திருமண வேலைகளில் பங்கெடுத்து வந்ததனால்,  விவசாய துவக்க மாதமான ஆடியில் குடும்ப நிகழ்வுகளை நடத்தினால், விவசாய பணிகள் முற்றாகப் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்திற்காக ஆடி மாதத்தில் விழாக்கள் நடத்துவதை அறிவுபூர்வமாகவும், சூழ்நிலைக் காரணங்களினாலும் தவிர்த்து வந்தனர் நம் முன்னோர்கள். தமிழகத்தில் இன்னமும் கூட பல கிராமங்களில் திருமண ஏற்பாடுகள் மேலே சொன்ன விதத்தில் தான் நடைபெற்று வருகின்றது. இப்போது புரிகின்றதா அன்று ஏன் ஆடி மாதத்தை தவிர்த்தார்கள் என்று. ஆனால் காலம் மாற, மாற மனிதனின் அறிவு என்பது சாத்திர, சம்பிரதாயங்களால் பார்ப்பனீயச் சிந்தனைகளால் பின்னோக்கியே செல்கின்றது. அதனால் தான் தேவை கருதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்ட நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ளாததோடு, அறிவுக்கு தொடர்பற்ற வகையில் சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று கூறி ஒரு மாதத்தையே கெட்ட மாதம் என்று மாற்றிவிட்டார்கள் பார்ப்பனப் புரட்டுப் புரோகிதர்கள்.

நிலப்பிரபுத்துவ அமைப்பு மாறி, தொழிற்புரட்சியும், நிர்வாகப் புரட்சிகளும் உருவாகி, விவசாயம் என்பது மிகக் குறைந்த சதவிகிதத்தினர் மட்டும் செய்யும் தொழிலாக மாற்றம் ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், அறிவாளியாக நின்று சிந்தித்தால், ஆடி மாதத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது புரியும். இன்றையக்கல்வியின் மூலம் படிப்பாளிகள் பெருகி விட்டார்கள். ஆனால் அறிவாளிகள் உருவாகவே இல்லை. உனக்கு ஒன்று சொல்லட்டுமா? ஒரு தேசத்தின் கலாச்சார சீரழிவிற்கும், பண்பாட்டுச் சீரழிவிற்கும் மூல காரணமானவர்களாக இருப்பவர்கள் யார்? படிப்பறிவில்லாதவர்களா? ஒரு போதும் இல்லை. பகுத்தறிவு என்பது துளியும் இல்லாத, படிப்பாளிகள் தான் எல்லா தேசத்திலும் பண்பாட்டுச் சீரழிவை ஏற்படுத்தும் ஆபத்தானவர்கள்.

அத்தகைய படிப்பாளிகள் இங்கு மிகுதியாக இருக்கின்றார்கள் என்றால் மிகையாகாது. ஆடி மாதம் அடுத்து வரவிருக்கின்றது. அந்த மாதத்தில் திருமணங்கள செய்யக் கூடாது என்பதால் அவசர அவசரமாக எங்கு பார்த்தாலும் ஆனி மாதத்தில் திருமணங்கள் ஊரெங்கும் நடந்தேறுகிறது. அதனால் தான் எங்கு பார்த்தாலும் நெருக்கடியான திருமணக் காட்சிகளாகத் தெரிகிறது. ஆனால் இந்த செயல்பாட்டிற்கு ஏதேனும் அர்த்தமுள்ளதா என்று சிந்தித்துப் பார்த்தால் இல்லை  என்ற பதில் தான் உண்மையானது. அன்றைய தேவைக்கும், அவசியத்திற்கும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்டு வந்த நம் முன்னோர்களின் பழக்கங்கள இன்று ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்திக்காமல் நமது சூழ்நிலைக்கு, ஏற்றார்போல் பின்பற்றாததின் விளவே இந்த தேவையற்ற நெருக்கடி நிலை! ஒரு மாதத்தின் 30 நாட்களும் கெட்டது என்று பதிவு செய்துவிட்ட நிலையும் ஆகும். இது வரலாற்றை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போடும் எதிர் மாற்றம் இல்லையா? கண்மூடித்தனமாக கேள்வி கேட்காமலும் அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ளாமலும் செயல்படும் அடிப்படை அறிவில்லாத இந்நிலை நாகரீகத்தின் பின்னோக்கிய வளர்ச்சி என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? எதன் வழித்தோன்றல்கள் இவை? ஆரியம், பார்ப்பனீயம் என்ற ஆதிக்க சக்திகளின் ஆட்டுவிப்புத்தன்மையும், கடவுள், சமயம் என்ற பெயரால் கேள்வி கேட்கக் கூடாத நிலையை உருவாக்கி அதன் மூலம் தான் விரும்பும் எதையும் எதிர்ப்புகளின்றி சாதித்துக் கொள்ளும் தந்திரமும் தான் காரணம்.

அப்படியே இது கெட்ட மாதம் என்பதாகக் கொண்டால் இது கழிவு மாதம் என்றால் இதற்கு முன் வாங்கிய பொருட்கள் எல்லாம் இந்த மாதத்தில் விற்றுத் தீர்த்து விட்டுத்தானே புதுப் பொருட்கள அடுத்த வியாபாரத்திற்கு வாங்குகிறார்கள். ஆடிக்கழிவு என்று இந்த உழைக்கும் மக்கள்  ஏமாற்றி அவர்கள் தலையில் பழைய பொருட்கள கட்டிவிட்டு லாபம் சம்பாதிக்கின்றார்கள் வியாபாரிகள், அவர்களுக்கு இது கெட்ட மாதமா? இல்லையே! இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல வியாபாரிகளுக்கும் கூட அமோகமான மாதமாக இருக்கும் போது மக்கள் ஏன் இதை புறக்கணிக்கத் துவங்குகிறார்கள்? ஒருபுறம் மூடத்தனமாக புறக்கணிப்பு, மறுபுறம் அதனையே கழிவு வியாபாரம் ஆக்கி லாபம் பெருக்கிக் கொண்ட வியாபாரத் தந்திரம். இரண்டுக்குமிடையே நமது பகுத்தறிவு என்ன செய்கிறது. எதைப் பகுத்துப்பார்த்து முடிவு செய்கிறது? சம்பிரதாயம், சடங்கு, சாஸ்திரம் எனற மாயைக்குள் நமது விஞ்ஞானிகளும் மாட்டிக்கொண்டு நல்ல நேரம் பார்த்துத்தான் செயற்கைக் கோளினை வான்வெளிக்கு அனுப்புகின்றார்கள்! அங்கேயும் பார்ப்பனீயம் தான் ஆதிக்கம் செய்கின்றது. 

அப்படியானால் நாம் மூளையற்றவர்களா? மூடர்களா? என்று நீ கேட்பது புரிகிறது. மூடர்களாக முட்டாள்களாக நாம் ஆக்கப்பட்டுவிட்டோம். இருபது நூற்றாண்டு கால அடிமைத்தனம் நம் மூளையை அழுக்கேற்றி வைத்துள்ள விதம், நம்மை இவ்விதம் ஆக்கிரமித்துள்ளது. இன்று நாம் எதையும் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாற்றப்பட்டு விட்டோம். இதனை மாற்றத்தான், நம் அறியாமையை உணர்ந்து அதனைப் போக்க முயன்றார்கள், அயோத்திதாச பண்டிதர், பாபாசாகேப் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார் போன்ற சிந்தனைவாதிகள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேள். உன் அறிவிற்கு அது சரியானதாக இருந்தால் ஏற்றுக்கொள். நான் சொல்கிறேன் என்பதற்காக தலையாட்ட வேண்டாம் என்றார் தந்தை பெரியார். அவர் எத்தனை பெரிய மாமனிதர் என்று இப்போது உனக்குப் புரியும்.

இப்பொழுது உனக்குக் காரணம் புரியும், நாம் ஏன் ஆடி மாதத்தில் நமது புதிய வீட்டிற்குக் குடிபுகுந்தோம் என்று! இஸ்லாமிய சகோதரர்கள் இன்றும் ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொள்கின்றார்கள். வளமையாகத் தான் வாழ்கின்றார்கள். ஒரே ஊரில் உள்ள மக்களின் ஒரு பிரிவினர் அதே நீரைப்பருகி, அதே காற்றைச் சுவாசித்து சுகமாக இருக்கும்போது, அதே ஊரில் உள்ள இன்னொரு பிரிவினருக்கு அதே மாதமும் நாளும் கெட்டதாக இருக்கின்றது என்றால் இங்கு இயற்கைச் சூழல் பாகுபாடு காண்பிக்கின்றதா? அல்லது மதங்களின் ஆளுமை மக்களின் செயல்களைக் கூறு போடுகின்றதா?

பகுத்தறிவுக்கு ஏற்புடையதாகாத எந்தச் செயலையும் ஏற்க மறுக்கவேண்டும். மூளைக்குள் வளர்த்து விடப்பட்டிருக்கும் முட்புதர்களை அழித்தொழிப்புச் செய்யவேண்டும்.

இதை ‘அபெகா பண்பாட்டு இயக்கம்’ தொடர்ந்து செய்யும். நீயும் உன் தோழர்களையும், அன்பான உன் கணவரையும் அழைத்துக்கொண்டுவா! இணைந்து பணியாற்றுவோம். 

என்றும் தோழமையுடன் உன் அப்பா.
                                                                                                             
                                                                                                        (நா.ஜெயராமன்)